காசு வந்தா காக்கா கூட கலர் ஆகிடும், ஆனா.. பிரியா பவானி ஷங்கர் ஆரம்ப கால லுக் பற்றி போட்ட பதிவு
பிரியா பவானி ஷங்கர்
சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக அறிமுகம் ஆகி அதன் பின் சீரியல்களில் நடிகையாக களமிறங்கியவர் தான் பிரியா பவானி ஷங்கர். டிவி புகழை கொண்டு சினிமாவில் நுழைந்து தற்போது முக்கிய நடிகையாக கோலிவுட்டில் கலக்கி வருகிறார்.
முக்கிய நடிகர்களின் படங்களில் நடிப்பதற்கு மிகப்பெரிய தொகையை சம்பளமாக வாங்கும் அவர் தற்போது சென்னையில் கடற்கரை அருகில் ஒரு பெரிய வீட்டை கட்டி இருக்கிறார்.

ஆரம்ப கால லுக்
"தற்போது பெரிய நடிகை ஆனதும் தன்னை அழகாக வைத்துக்கொள்ள 10 பேர் வேலை செய்வதாக கூறி இருக்கும் பிரியா பவானி ஷங்கர், தான் கல்லூரி படித்த காலங்களில் அவ்வளவு செலவு செய்ய முடியவில்லை, அதனால் அதிகம் tan ஆக இருந்தேன்"என டிவி சேனலுக்காக கௌதம் மேனனை பேட்டி எடுத்த வீடியோவை அவர் வெளியிட்டு இருக்கிறார்.
"காசு இருந்தா காக்கா கூட வெள்ளை ஆகிடும்னு சொல்லுவாங்க, ஆனால் காசு தானா தேடி வீட்டுக்கு வராது. நீங்க தான் இந்த உலகத்துடன் போராடி உங்களுக்கு தேவையானதை பெற வேண்டும். அப்போது அதை வைத்து என்ன செய்யலாம் என நீங்க முடிவு பண்ணுங்க. கலர் ஆகணும்னு கட்டாயம் இல்லை" என பிரியா பவானி ஷங்கர் குறிப்பிட்டு இருக்கிறார்.
தோனியை 'தல' என குறிப்பிட்ட குஷ்பூ! கோபமாக கமெண்ட் செய்யும் அஜித் ரசிகர்கள்