டிடி வாழ்க்கையில் விதி விளையாடிவிட்டது, மிகப்பெரிய வலி... எதிர்நீச்சல் சீரியல் ரேணுகா ஓபன் டாக்
எதிர்நீச்சல்
சன் தொலைக்காட்சியில் ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்க்கும் சீரியல்களில் ஒன்று தான் எதிர்நீச்சல்.
குணசேகரன் என்ற ஆணாதிக்க எண்ணம் கொண்ட நபரிடம் இருந்து சாதிக்க போராடும் அவரது வீட்டுப் பெண்களின் போராட்ட கதையாக தொடர் கதை உள்ளது.
ஆனால் குணசேகரனுக்கு ஆதரவாகவே கதை இருப்பதாகவும் பெண்கள் மீண்டும் மீண்டும் தோற்றுப்போய் அடிமையாகவே உள்ளார்கள் என்ற வருத்தம் சீரியல் ரசிகர்களுக்கு உள்ளது.
இப்போது குணசேகரன் புதிய பிளான் போட்டுள்ளார், அதாவது தனது தம்பிகளை அவரது மனைவிகளை அடக்கி வைக்க ஒரு புது பிளான் போட்டுக் கொடுத்துள்ளார்.

ரேணுகா
இந்த தொடரில் ரேணுகா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் பிரியதர்ஷினி, இவர் பிரபல தொகுப்பாளினி டிடியின் சகோதரி. இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் தனது சகோதரி குறித்து பேசியுள்ளார்.

அதில் அவர், நான் வீட்டின் மூத்தவளாக இருந்தாலும் டிடி எப்போதும் எனக்கு துணையாக இருந்துள்ளார். என்னுடைய குடும்பம், அம்மா, தம்பி என அனைவரையும் அவர் தான் பார்த்துக்கொண்டார்.

திருமண விஷயத்தில் டிடியின் வாழ்க்கையில் விதி விளையாடிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். ஆசை ஆசையாக காதலித்து திருமணம் செய்துகொண்டாள், ஆனால் திருமண வாழ்க்கை சரியாக அமையவில்லை. அது ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் பெரிய வலியாக உள்ளது.