இதுவரை வெளியே சொல்லாத திகில் சம்பவம்! அதிர்ச்சியான அம்மா, மகள்! நடிகைக்கு நேர்ந்த கொடுமை!
நடிகை பிரியங்கா சோப்ரா தன்னை விட 10 வயது குறைவான ஆங்கில பாடகர் நிக் ஜோன்ஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவிலேயே வீடு வாங்கி செட்டிலானார்.
அண்மையில் அவர் மும்பையில் தன் பங்களா வீட்டை நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ்க்கு ரூ 7 கோடிக்கு விற்றார். 38 வயதான அவர் தற்போது முற்றுப்பெறாத என்ற தலைப்பில் புத்தகம் எழுதியுள்ளார். இதில் தன் அனுபவங்கள் குறித்து எழுதியுள்ளார்.
இதில் கடந்த 2000 ம் ஆண்டில் உலக அழகி பட்டம் வென்ற சில நாட்களிலேயே திரையுலகில் நுழைந்ததாக கூறியுள்ளார்.
தனக்கு மிக மோசமான சைனஸ் தொற்று ஏற்றபட்டதால் மூச்சுவிடுவதில் சிரமம் இருந்தது, மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றார்கள். பின் ஆப்ரேசனும் முடிவடைந்தது.
பின் கட்டுகளை அகற்ற வேண்டிய நேரம் வந்தது. அதன் பின்னர் மூக்கின் நிலை பற்றி தெரிந்த பின் நானும் என் அம்மாவும் அதிர்ச்சியானோம்.
என் அசல் மூக்கு போய்விட்டது. முகமும் வித்தியாசமாக மாறிவிட்டது. இதனால் திரைப்படங்களில் இருந்து என்னை விலக்கினார்கள். அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டேன். பிளாஸ்டிக் சோப்ரா என்ற கேலி கிண்டல் செய்தனர். இது தொழிலையும் பாதித்தது. அறுவை சிகிச்சை விவரங்கள் யாரிடமும் தெரிக்க மறுத்தேன். இப்போது என் தோற்ற விசயத்தில் என்னை நானே சமாதானப்படுத்திக்கொண்டே என கூறியுள்ளார்.