கண்ணை இழந்திருப்பேன், ஷூட்டிங்கில் விபத்து.. நடிகை பிரியங்காவின் பரபரப்பு பேட்டி
பிரியங்கா சோப்ரா
விஜய் நடிப்பில் வெளிவந்த தமிழன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பிரியங்கா சோப்ரா. கடந்த 2002ம் ஆண்டு வெளியாகி ஹிட் கொடுத்த இந்த படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்திருந்தார்.
அதன் பின் தமிழ் சினிமா பக்கம் வராதவர் பாலிவுட்டில் செம பிஸியான நாயகியாக வலம் வர தொடங்கிவிட்டார். ஹிந்தி தாண்டி மராத்தி மொழிகளில் சில படங்கள் நடித்தவர் இப்போது ஹாலிவுட்டில் படங்கள் நடிக்கிறார்.
பிரபல ஹாலிவுட் பாடகர் நிக் ஜோன்ஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
பரபரப்பு பேட்டி
இந்நிலையில், ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு இவர் அளித்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், " ஹெட்ஸ் ஆஃப் ஸ்டேட் படத்தின் ஷூட்டிங்கில் ஒரு விபத்து நடந்தது. அந்த விபத்தில் நான் எனது கண்ணை இழந்திருப்பேன். அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தேன்" என்று தெரிவித்துள்ளார். தற்போது, இந்த தகவல் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.