தாலி விஷயத்தில் ரோபோ ஷங்கர் மனைவி பிரியங்கா எடுத்த அதிரடி முடிவு... பிரபலம் பகிர்ந்த தகவல்
ரோபோ ஷங்கர்
ரோபோ ஷங்கர், தமிழ் சினிமாவில் கடந்த சில வாரங்களாக பேசப்படும் ஒரு நடிகர்.
ஆரம்பத்தில் இருந்து கடின உழைப்பை மட்டுமே நம்பி போராடி முன்னணி காமெடி நடிகராக வளர்ந்தவர். ஒவ்வொரு கலைஞனுக்கும் ஒரு ஸ்டைல் என்பது போல் இவரது காமெடியில் தனக்கான ஸ்டைலில் நடித்துவந்து மக்களை கவர்ந்து வந்தார்.
ஆனால் இவருக்கு இருந்த சில தீய பழக்கங்களால் உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் முடங்கினார். பின் பெரிய போராட்டத்திற்கு பிறகு மீண்டு நடிக்க வந்தவர் உடல்நலக் குறைவால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
பிரியங்கா முடிவு
கடந்த செப்டம்பர் 18ம் தேதி ரோபோ ஷங்கர் உயிரிழந்தார். அன்று முதல் பிரபலங்கள் பலரும் அவருடனான தங்களது அனுபவத்தை பகிர்ந்த வண்ணம் உள்ளனர்.
அப்படி ஒரு பேட்டியில் நாஞ்சில் விஜயன் பேசும்போது, இந்த விஷயத்தை பிரியங்கா அவர்களின் அனுமதி இல்லாமல் சொல்கிறேன். ரோபோ ஷங்கர் கலைமாமணி பட்டம் வாங்கியுள்ளார், அதற்காக அவருக்கு ஒரு செயின் கொடுத்தார்கள்.
அதனை சமீபத்தில் மூன்று லட்சம் ரூபாய்க்கு அடகு வைத்திருந்தார்கள். சங்கர் அண்ணன் இறந்ததும் அவரது நண்பர்கள் எல்லாம் சேர்ந்து அந்த செயினை மீட்டு குடும்பத்திடம் கொடுத்திருக்கிறார்கள்.
அதை தனது கழுத்தில் போட்டுக்கொண்டு பிரியங்கா அக்கா இனிமேல் அதுதான் எனது தாலி, எப்போதும் கழற்றமாட்டேன் என கூறியிருக்கிறார் என்றார்.