மாரடைப்பு காரணமாக மரணமடைந்த தயாரிப்பாளர்.. அதிர்ச்சியில் திரையுலகம்
தயாரிப்பாளர் ஜெயமுருகன்
தமிழ் திரையுலகின் பிரபல தயாரிப்பாளர் ஜெயமுருகன் மாரடைப்பு காரணமாக மரணமடைந்துள்ளது பெரும் அதிர்ச்சியை திரையுலகில் ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபலமான தயாரிப்பாளரும், இயக்குநருமானவர் ஜெயமுருகன். இவர் 1995ல் வெளிவந்த சிந்து பாத் படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகி, பின் ரோஜா மலரே படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமானார்.

இதுமட்டுமின்றி தான் இயக்கிய சில திரைப்படங்களுக்கு இசையமைப்பாளராகவும் இருந்துள்ளார். மேலும் சில திரைப்படங்களில் நடித்தும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மரணம்
இப்படி பன்முக திறமை கொண்ட ஜெயமுருகன் தனது இறுதி காலகட்டத்தை சொந்த ஊரான திருப்பூரில் கழித்து வந்துள்ளார். இந்த நிலையில், ஜெயமுருகனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட மரணமடைந்துள்ளார்.

இவருடைய மரணம் திரையுலகிற்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இவருடைய இறுதி சடங்குகள் திருப்பூர் தென்னம்பாளையத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan