பான் இந்திய ஹிட் திரைப்படமான புஷ்பா 2 தொடங்குவதில் தாமதம் ! என்ன காரணம் தெரியுமா?
புஷ்பா
இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் பான் இந்திய அளவில் ஹிட்டான திரைப்படம் புஷ்பா.
தமிழ், ஹந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் பெரிய வரவேற்பை பெற்ற இப்படம் ரூ. 350 கோடிக்கும் மேல் வசூலை குவித்து சாதனை படைத்தது.
மேலும் இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் போட்டோ ஷூட் எல்லாம் நடந்த நிலையில் அக்டோபர் இறுதியில் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என சொல்லப்பட்டது.
ஆனால் தற்போது நவம்பர் அல்லது டிசம்பர் முதல் வாரத்தில் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. திரைக்கதை உருவாக்கத்தில் முதலில் தாமதமானதாகவும், தற்போது லொகேஷன்கள் கிடைக்காததால் தாமதம் ஆகுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் தேதி மாற்றி தர வேண்டிய நிலை ஏற்பட்டு இருப்பதாகவும், 2024 ஆம் ஆண்டு துவக்கத்தில் இப்படம் வெளியாகலாம் என்றும் தகவல் பரவி வருகிறது.
துணிவு முதல் சிங்கிள் எப்போது ரிலீஸ் ஆகிறது தெரியுமா