அந்த கடையை கொண்டுபோய் சுடுகாடு பக்கத்துல வைங்க.. CM விஜய்க்கு நடிகர் பார்த்திபன் கொடுத்த ஐடியா
நடிகர் பார்த்திபன் அனைத்தையும் வித்தியாசமாக செய்கிறேன் என சில நேரங்களில் சர்ச்சைகளிலும் சிக்குவதுண்டு. அப்படி சமீபத்தில் அவர் தனது ஜாதி பெயரை மேடையில் சொல்லி சர்ச்சையில் சிக்கிக்கொண்டார். அதை சமாளிக்க "ஜாதி மதம் அற்றவர்" என நீதிமன்றம் வரை சென்று சர்டிபிகேட் வாங்கிக்கொண்டார்.
மேலும் சமீபத்தில் முதலமைச்சர் விஜய்யையும் சந்தித்து பேசி இருந்தார் பார்த்திபன். அப்போது டாஸ்மாக் கடைகள் பிரச்சனைக்கு ஒரு தீர்வை சொல்லிவிட்டு வந்தாராம்.

டாஸ்மாக்
எல்லா டாஸ்மாக் கடைகளையும் ஊருக்கு ஒதுக்குபுறமாக இருக்கும் சுடுகாடுகளுக்கு அருகில் வைக்கும்படி ஐடியா கொடுத்தாராம் பார்த்திபன்.
அதனால் ஊருக்குள் வரும் சண்டை குறையும், அரசுக்கு வருமானமும் தடை இல்லாமல் வரும். கடைசிஆய்க வர வேண்டிய இடத்துக்கு இப்போதே வந்துட்டோம் என ஒரு எண்ணமும் குடிப்பவர்களுக்கு வரும் என பார்த்திபன் கூறினாராம்.
அவரது இந்த ஐடியா சமூக வலைத்தளங்களில் தற்போது பேசுபொருளாகி இருக்கிறது.