ஜாதி பெருமை பேசியதால் வந்த விமர்சனம்.. நடிகர் பார்த்திபன் எடுத்த புது முடிவு
நடிகர் பார்த்திபன் சமீபத்தில் உஸ்தாத் பகத் சிங் என்ற தெலுங்கு படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசும்போது தான் நாயுடு சமூகத்தை சேர்ந்தவர் என்பதை வெளிப்படையாக மேடையிலேயே கூறினார்.
தமிழ்நாட்டை தாண்டியதும் அவர் ஜாதி பெருமை பேசுவதாக கடுமையான விமர்சனங்கள் எழுந்த நிலையில் அவர் அது பற்றி மன்னிப்பு கேட்டு விளக்கம் கொடுத்தார். தான் தெலுங்கு சமூகத்தை சேர்ந்தவர் என்பதை சொல்லவே அப்படி கூறினேன் என அவர் காரணம் கூறினார்.

புது முடிவு
தான் விளக்கம் கொடுத்த பிறகும் சமூக வலைத்தளங்களில் தன்னை பற்றி விமர்சனங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால் பார்த்திபன் ஒரு புது முடிவை எடுத்து இருக்கிறார்.
ஜாதி, மதம் இல்லாதவர் என சாதி சான்றிதழில் மாற்றம் செய்வதற்காக அவர் விண்ணப்பித்து இருக்கிறாராம். ஆனால் தேர்தல் நேரம் என்பதால் அதிகாரிகள் அந்த மனுவை பின்னர் பரிசீலிப்பதாக கூறி இருக்கிறார்களாம்.
ஓரு நாட்காட்டியிலிருந்து ஏழெட்டை
— Radhakrishnan Parthiban (@rparthiepan) March 27, 2026
கழட்டி விட்டெறிந்ததைப் போல….
என் பதிவுகள் அற்ற வெற்றிடமாய் ….
நல்லதை மட்டுமே நினைவில் கொண்டு
நட்பிக்கையோடுத் தொடர்வோம்….https://t.co/oF7po5xaZe