Dude கதையை 20 வருடம் முன்பே நான் எழுதினேன்.. நடிகர் பார்த்திபன்
பிரதீப் ரங்கநாதனின் Dude படம் கடந்த வருடம் நல்ல வசூலை குவித்த படங்களில் ஒன்று. அந்த படத்தின் கதை கடுமையான விமர்சனங்களை சந்தித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தாலி சென்டிமென்ட் கொஞ்சமும் இல்லாமல் இப்படி எல்லாம் படம் எடுக்கலாமா என பல முன்னணி பிரபலங்கள் தாக்கி பேசினார்கள்.
இந்நிலையில் நடிகர் பார்த்திபன் dude படத்திற்கு ஆதரவாக பேசி இருக்கிறார்.

20 வருடம் முன்..
20 வருடம் முன்பே தான் dude போன்ற ஒரு கதையை எழுதிவிட்டேன் என பார்த்திபன் கூறி இருக்கிறார்.
திருமணம் ஆகி மாப்பிள்ளை மற்றும் பெண்ணை ஊரே சேர்ந்து சீர் கொடுத்து ரயிலில் ஏற்றி அனுப்புகிறது. ஆனால் அந்த பெண் காதலிக்கும் பையன் அதே ரயிலில் இருப்பான், அவர் உடன் பெண்ணை சேர்ந்து வைத்துவிட்டு அடுத்த ஸ்டேஷனில் மாப்பிள்ளை இறங்கி செல்வது போல கதை நான் எழுதினேன். அதை தொடர்ந்து பிளாஷ்பேக் காட்சிகள் வரும் என பார்த்திபன் கூறி இருக்கிறார்.

பிறந்தநாளில் முதல்வரை சிரிக்க வைத்த பிரேமலதா மற்றும் ஓபிஎஸ்... சட்டசபையில் நடந்தது என்ன? IBC Tamilnadu