அது கெட்ட வார்த்தை என்று தெரியாது.. உண்மையை சொன்ன நடிகை ராஷி கண்ணா!
ராஷி கண்ணா
இந்திய அளவில் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவர் ராஷி கண்ணா. இவர் இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இப்படத்தை தொடர்ந்து அரண்மனை 3 & 4, அயோக்யா, அடங்க மறு ஆகிய படங்களில் நடித்து தமிழில் தனக்கென்று தனி இடத்தை உருவாக்கியுள்ளார்.
இவருக்கு கோலிவுட் முதல் பாலிவுட் வரை நல்ல பேன் பேஸ் உள்ளது. திரைப்படங்களை தாண்டி வெப் தொடர்களிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.
ஒரு படத்தின் புரமோஷன் விழாவில் கலந்து கொண்ட ராஷி கண்ணா உணர்ச்சிவசப்பட்டு தவறுதலாக ஒரு வார்த்தையை பேசினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது.

ஓபன் டாக்!
தற்போது இது குறித்து டிரெய்லர் வெளியீட்டு விழாவில் ராஷி விளக்கம் கொடுத்துள்ளார்.
அதில், " அது ஒரு கெட்ட வார்த்தை என்று எனக்கு தெரியாது. அது ஒரு அழகான வார்த்தை என்றுதான் நினைத்தேன்" என்று தெரிவித்துள்ளார்.

சிவபெருமானின் அருள் பொழியும் ஸ்ராவண மாதம்: இந்த ராசிகளின் வாழ்க்கையே அதிர்ஷ்டத்தால் நிறையும்! Manithan
பழனி கோயில் நில விவகாரத்தில் அரசுக்கு எதிராக திட்டமிட்ட பிரசாரம் – அமைச்சர் ரமேஷ் குற்றச்சாட்டு IBC Tamilnadu