நடிகை ராஷி கண்ணாவுக்கு அடித்த ஜாக்பாட்.. பெரும் மகிழ்ச்சியில் ரசிகர்கள்
ராஷி கண்ணா
மெட்ராஸ் கபே என்ற படத்தின் மூலம் நாயகியாக நடிக்க தொடங்கியவர் நடிகை ராஷி கண்ணா. பின், நயன்தாரா நடித்த இமைக்கா நொடிகள் படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமானவர்.
அதை தொடர்ந்து, அடங்கமறு, அயோக்யா, சங்க தமிழன், துக்லக் தர்பார், அரண்மனை 3, திருச்சிற்றம்பலம், சர்தார், அரண்மனை 4 என பல படங்களில் நடித்துள்ளார்.
தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழிகளிலும் நல்ல கதையுள்ள படங்களில் நடித்து வருகிறார். அடுத்து தெலுங்கில் ஓஹலுஸ் குசாகுலாடேட் என்ற படத்தில் நடித்தவர் ரசிகர்களின் கவனத்தை பெற்றார்.

ஜாக்பாட்
தென்னிந்திய திரை உலகில் அவருக்கு அதிக பட வாய்ப்புகள் இல்லாத நிலையில், தற்போது ராஷி கண்ணாக்கு ஜாக்பாட் அடித்தது போன்று பவன் கல்யாண் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
பவன் கல்யாண் நடிப்பில் உருவாக உள்ள "உஸ்தாத் பகத்சிங்" என்ற படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்க உள்ளனர். அதில், ஒரு நாயகியாக ராஷி கண்ணா நடிக்கவுள்ளார்.
இந்த ராசிகளில் பிறந்தவர்கள் திடீர் கோடீஸ்வர யோகம் கொண்டவர்களாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக 'ஜனநாயகன்' தயாரிப்பாளர் - வெளியான அரசாணை IBC Tamilnadu