முதலிரவில் என்ன செய்வீர்கள், திடீரென பத்திரிக்கையாளரை கேட்ட நடிகை- பரபரப்பை ஏற்படுத்திய பிரபலம்
புல் புல் என்ற படத்தின் மூலம் கன்னட சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் ரக்சிதா ராம்.
லேடி சூப்பர் ஸ்டார் என்று சொல்லும் அளவிற்கு அங்கு இவர் வளர்ந்திருக்கிறார், அது மட்டும் இல்லாமல் அதிகபட்சமாக படங்களில் நடித்துவரும் நடிகையும் இவர் என்றே கூறலாம். இப்போது லவ் யூ ரச்சூ என்ற படத்தில் நடித்துள்ளார்.
படத்திற்கான புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரக்சிதா ஒரு பத்திரிக்கையாளரிடம், நீங்கள் முதலிரவில் என்ன செய்வீர்கள் என்று கேட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காதல் காட்சிகளில் ஹீரோவுடன் நெருக்கமாக நடித்திருப்பது குறித்து பத்திரிக்கையாளர் கேள்வி கேட்க அதற்கு ரக்சிதா, இங்கு வந்திருக்கும் பலருக்கும் திருமணம் ஆகியிருக்கும் என்று நான் நினைக்கிறேன். இருந்தாலும் உங்களிடம் நான் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன்.
யாரும் சங்கடமாகவும், தவறாகவும் நினைக்க வேண்டாம். பொதுவாக முதலிரவின் போது என்ன செய்வார்கள்? ரொமான்ஸ் தானே செய்வார்கள். அது தான் இந்த படத்திலும் காண்பிக்கப்பட்டுள்ளது.
காதல் காட்சிகளில் நான் நெருக்கமாக நடித்து இருந்தால் அதற்கு நிச்சயமாக ஒரு காரணம் இருக்கும். மேலும், இந்த படத்தை பார்க்கும் போது அதற்கான காரணத்தை நீங்களே புரிந்துகொள்வீர்கள் என்று கூறியிருக்கிறார்.