என் கழுத்தை நெரித்துக்கொல்ல முயன்றார்கள்.. பிக் பாஸ் பிரபலம் ரச்சிதா
விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 பிரபலமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. கடந்த வாரம் ஜனனி வெளியேறிய நிலையில், இந்த வாரம் யார் வெளியேறுவார் என மக்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்.
தற்போது வரை மைனா நந்தினி மற்றும் ரச்சிதா ஆகியோருக்கு ஓட்டு எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. இவர்களில் ஒருவர் வெளியேறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வார டாஸ்க்
இந்த வார டாஸ்கில் பிக் பாஸ் ஆரம்ப பள்ளி போல் செயல் படுகிறது. இதில் அனைத்து போட்டியாளர்களும் மழலை மொழியில் பேச வேண்டும். இந்த டாஸ்கில் பள்ளியின் ஆசிரியராக விக்ரமன் மாறி சக போட்டியாளர்க்கு வகுப்பு எடுத்தார்.

ரச்சிதா உருக்கம்
தற்போது வெளியான பிக் பாஸ் மூன்றாவது ப்ரோமோவில் ரச்சிதா தனது குடும்பத்தை பற்றி பேசியுள்ளார். அதில் அவர். " என் தந்தை ஒரு ட்ரைவர், என்னுடைய அம்மா படிக்கவில்லை. எங்கள் வீட்டில் தினமும் நடக்கும் சண்டைகளை பார்த்து தான் வளர்ந்தேன்.
நான் சரியாக படிக்காததால் என் அம்மா என்னுடைய கழுத்தை நெரித்து நீ செத்து போ என்று சொல்லுவார்" என்று தனது சோகத்தை கண்ணீர்விட்டு சக போட்டியாளர்களிடம் பகிர்ந்துள்ளார். இதை கேட்ட ஹவுஸ்மேட்ஸ் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அட்லீ-பிரியா அட்லீ வளைகாப்பு நிகழ்ச்சிக்கு வந்த விஜய்