கரையானால் ஒரு பெண்ணுக்கு நேர்ந்த சோகம், ராகவா லாரன்ஸ் செய்த நெகிழ்ச்சி செயல்... பாராட்டும் மக்கள்
வைரல் வீடியோ
சமூக வலைதளங்கள் மூலம் நல்லது, கெட்டது என எல்லா விஷயங்களும் உள்ளது.
அப்படி நல்லதில் ஒரு விஷயம், யாராவது எங்கேயாவது கஷ்டப்பட்டால் அந்த விவரம் சமூக வலைதளங்களில் வெளியாகி உலகம் உள்ள யாராவது உதவி செய்துவிடுகிறார்கள். அப்படி தான் இப்போது ஒரு நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் சுக்கனாம்பட்டியை சேர்ந்த முத்துக்கருப்பி என்ற பெண் தனது கணவருடன் கூலி தொழில் செய்துவருகிறார். அந்த தொழிலில் வரும் சம்பளத்தை ஒரு தகர டப்பாவில் போட்டு சிறுக சிறுக சேமித்துள்ளார்.
இவருக்கு 2 மகள்கள் ஒரு மகன் இருக்கிறார்கள், அவர்களின் காது குத்துக்காக பணத்தை சேமித்து வைத்துள்ளார். ஒரு லட்சம் வரை சேமித்த அந்த பணத்தை மழை காரணமாக கரையான் அந்த உண்டியலுக்குள் சென்று பணத்தை அரித்துவிட்டன.
தனது பணம் அரிக்கப்பட்டிருப்பதை கண்டு முத்துக்கருப்பி கதறிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பலரையும் கலங்க செய்தது.

வீடியோ
அந்த பெண் கதறிய வீடியோ ராகவா லாரன்ஸ் கண்ணில் பட முத்துக்கருப்பியை சென்னை வரவழைத்து ஒரு லட்சம் ரூபாயை தந்திருக்கிறார்.

இந்த விஷயத்தை வீடியோவுடன் பகிர்ந்துள்ளார் ராகவா லாரன்ஸ், அவரை ரசிகர்கள் பாராட்டியும் வருகிறார்கள்.
ரயில் நிலையத்தில் படுத்துறங்கிய லாரி ஓட்டுநர் மகன் - RCB அணியின் நம்பிக்கை நட்சத்திரம் News Lankasri
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
முகம் மெலிந்த நிலையில் மனைவியுடன் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ: நியூயார்க்கில் நடந்த விசாரணை News Lankasri