பின்வாங்கும் ஆர்ஆர்ஆர்? கிடைத்த லேட்டஸ்ட் தகவல்
பாகுபலிக்கு பிறகு ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ஆர்ஆர்ஆர். ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் நடித்துள்ள இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரிய அளவில் இருக்கிறது. அதனால் படம் பெரிய வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
ஜனவரி 7ம் தேதி தான் படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. தெலுங்கு மட்டுமின்றி தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளிலும் மிக பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆக உள்ளது.
ஆனால் தற்போது தமிழ்நாட்டில் கொரோனா காரணமாக தியேட்டரில் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என அரசு தெரிவித்து உள்ளது. மேலும் கர்நாடகாவில் இரவு ஊரடங்கு, பல வட மாநிலங்களில் தியேட்டர் 50% இருக்கை மட்டுமே பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஆர்ஆர்ஆர் உட்பட பொங்கல் ரிலீசுக்கு தயாராக இருக்கும் படங்களை அதிகம் இழப்பை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தற்போது ஆர்ஆர்ஆர் படம் தள்ளிப்போகிறது என நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வந்திருக்கிறது. விரைவில் அறிவிப்பு வரலாம் என்றும் தெரிகிறது.