ரஜினி சொல்லியும் கேட்காத தனுஷ் ! தோல்வியில் முடிந்த சமரச பேச்சுவார்த்தை..
நடிகர் தனுஷ் நேற்று ஒட்டுமொத்த திரையுலகமே அதிர்ச்சிக்கு உள்ளாகும் படி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதன்படி தனது மனைவி ஐஸ்வர்யா தனுஷை 18 வருட திருமண வாழ்க்கைக்கு பின் அவரை பிரிவதாக அறிவித்து இருந்தார்.
இதேபோல் ஐஸ்வர்யா தனுஷும் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர்களின் பிரிவு குறித்து அறிக்கை வெளியிட்டு இருந்தார்.
இந்நிலையில் தற்போது தனுஷ் - ஐஸ்வர்யா பிரிவு குறித்து பல்வேறு தரப்பான தகவல்களும் இணையத்தில் பரவி வருகிறது.
அந்த வகையில் கடந்த சில நாட்களாகவே இருவருக்கும் கருத்துவேறுபாடு அதிகரித்ததால் விவாகரத்து செய்து கொள்ள முடிவெடுத்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து ரஜினி இருவரிடமும் பலமுறை பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். மேலும் தனுஷிடம் ரஜினிகாந்த செய்த சமரச முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்ததாக கூறப்படுகிறது.
தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் விட்டுக்கொடுக்காமல் அவர்களின் முடிவில் உறுதியாக இருந்துள்ளனர். இதனால் ரஜினியின் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளது.
மனைவியை பிரிந்ததில் சந்தோஷம் தான்... இரண்டாம் திருமணம் குறித்து நடிகர் பார்த்தீபன் ஓபன் டாக்! Manithan
லண்டன் பள்ளியில் கத்திக்குத்து தாக்குதல்: 2 மாணவர்கள் நிலை கவலைக்கிடம்: 13 வயது சிறுவன் கைது News Lankasri
இந்தியா வீரர்களின் பேட்டில் பூசப்பட்டுள்ள பொருளே அதிரடிக்கு காரணம் - இலங்கை வீரர் குற்றச்சாட்டு News Lankasri