ரஜினியே தெய்வமே!..ஜெயிலர் படம் வெற்றி பெற மண் சோறு சாப்பிட்ட ரஜினி ரசிகர்கள்..இதோ புகைப்படம்
ஜெயிலர்
தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக இருப்பவர் தான் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவருக்கென தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது.
தற்போது இவர் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படம் நாளை வெளியாக இருக்கிறது. தமிழ் நாட்டில் மட்டுமின்றி கர்நாடக, ஆந்திர, கேரளா போன்ற இடங்களில் ஜெயிலர் ப்ரீ புக்கிங்கில் வசூல் சாதனை படைத்து வருகிறது.

ரஜினி ரசிகர்கள்
இந்நிலையில் ரஜினிகாந்த் ரசிகர்கள் ஜெயிலர் படம் வெற்றி பெற மண் சோறு சாப்பிட்டு, படத்தில் இருக்கும் வசனத்தை தேங்காயில் பொறிக்க பட்டு அதை பூஜை செய்துள்ளனர். பின்னர் ரஜினியே கடவுளே ரஜினி வாழ்க என கோஷம் போட்டனர்.
இதையடுத்து பேட்டி அளித்த ரஜினி ரசிகர்கள் , 'அப்பளத்தை நொறுக்க சம்மட்டி தேவையில்லை. தலைவரின் சுண்டு விரலே போதும்' என விஜய்யை மறைமுகமாக தாக்கி பேசி இருந்தனர்.

ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு மனைவியாக நடிக்க ரம்யா கிருஷ்ணன் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா