நாளை எனக்கு இரண்டு முக்கியமான நிகழ்வுகள்.. நடிகர் ரஜினி பேட்டி
தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் தற்போது அண்ணாத்த படம் உருவாகியுள்ளது. இப்படம் சிவா இயக்கியுள்ளார்.
அண்ணாத்த திரைப்படம் வரும் தீபாவளி நவம்பர் 4ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதற்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
சென்னை போயஸ்கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது :
தாதாசாகேப் பால்கே விருது பெறுவது மகிழ்ச்சியளிக்கிறது. விருது கிடைக்கும்னு எதிர் பார்க்கவில்லை. இந்த தருணத்தில் கே.பி. சார் இல்லாதது வருத்தம் அளிப்பதாக கூறிய ரஜினிகாந்த், விருதைப் பெற்ற பிறகு செய்தியாளர்களை சந்திப்பதாக கூறினார்.
மேலும் நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் பிரஸ் ரிலீஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் " நாளை எனக்கு இரண்டு முக்கியமான நிகழ்வுகள். ஒன்று தாதாசாகேப் பால்கே விருது மற்றொருன்று, என் மகள் சொந்தர்யா விசாகனின் சொந்த முயற்சியில், HOOTE-என்கிற App-ஐ வெளியிடுகிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.
🙏🏻🇮🇳 pic.twitter.com/vkTf6mxYUu
— Rajinikanth (@rajinikanth) October 24, 2021