சிம்புவின் 48வது படம் குறித்து பேசிய ரஜினிகாந்த்.. என்ன சொன்னார் தெரியுமா
எஸ்.டி.ஆர் 48
சிம்பு நடிப்பில் அடுத்ததாக உருவாகவுள்ள திரைப்படம் எஸ்.டி.ஆர் 48. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலம் வெற்றி இயக்குனராக முத்திரை பதித்த தேசிங்கு பெரியசாமி இப்படத்தை இயக்குகிறார்.
ராஜ் கமல் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இப்படத்தின் கதையை முதன் முதலில் ரஜினியிடம் தான் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி கூறியுள்ளார்.
அவர் நிராகரித்த பின் தான் இந்த கதை சிம்புவிடம் வந்துள்ளது. கதை கேட்டவுடன் சிம்புவிற்கு பிடித்துப்போக கதையில் எந்த ஒரு மாற்றத்தையும் அவர் செய்ய சொல்ல வில்லையாம்.
வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்
இந்நிலையில், தனக்கு கூறிய கதையில் தற்போது சிம்பு நடிப்பதை அறிந்த ரஜினிகாந்த், இயக்குனர் தேசிங்கு பெரியசாமியிடம் பேசியுள்ளார்.
சூப்பரா பண்ணுங்க, நல்லா பண்ணுங்க All The Best என கூறி வாழ்த்து தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த். இந்த விஷயத்தை தேசிங்கு பெரியசாமி பகிர்ந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.