குடிப்பழக்கத்தால் எவ்ளோவோ இழந்தேன்.. இசை வெளியிட்டு விழாவில் ரஜினிகாந்த் கூறிய விஷயம்
ஜெயிலர்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜெயிலர். நெல்சன் திலிப்குமார் இயக்கியுள்ள இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ஜாக்கி ஷ்ரோஃப், மோகன்லால், சிவராஜ் குமார், ரம்யா கிருஷ்ணன், தமன்னா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அண்ணாத்த படத்தை தொடர்ந்து மீண்டும் ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். அண்ணாத்த திரைப்படம் சற்று விமர்சன ரீதியாக பின்னடைவை சந்தித்த காரணத்தினால் ஜெயிலர் படம் மாபெரும் வெற்றிபெறவேண்டும் என மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்துள்ளனர்.
அனிருத் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று மாலை பிரம்மாண்டமாக நடந்தது.
ரஜினிகாந்த் கூறிய அறிவுரை
இந்த இசை வெளியிட்டு விழாவில் பல சுவாரஸ்யமான விஷயங்கள் குறித்து ரஜினிகாந்த் பேசினார்.
இறுதியாக 'மது அருந்துவதால் மூளை வேலை செய்யாது, சரியான முடிவு எடுக்க முடியாது, குடும்பம் பாதிக்கும். குடி பழக்கத்தை கைவிட்டு விடுங்கள், குடி பழக்கத்தால் எவ்ளோவோ இழந்தேன்' என அனைவருக்கும் அறிவுரை கூறினார். இந்த விஷயம் தற்போது வைரலாகி வருகிறது. குடி பழக்கத்தையும், சிகரெட் பழக்கதையும் அனைவரும் கைவிட வேண்டும என பல இடங்களில் ரஜினி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சூப்பர்ஸ்டார் டைட்டில் என்னைக்குமே தொல்லை தான்.. ஜெயிலர் பட விழாவில் ரஜினி

கெட்டவார்த்தை பேசினால் அவனுக்கு பிடிக்காது; திட்டிய ஆசிரியர் - மாணவன் தற்கொலையால் கதறும் தாய்! IBC Tamilnadu

எடப்பாடி வீட்டுக்கும் செல்வேன்; திமுக கூட்டணியில் கூடுதல் கட்சிகள் இணைய வாய்ப்பு - ஸ்டாலின் IBC Tamilnadu

அஜித் குமார் மரண வழக்கில் கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு News Lankasri
