கார் கூட வேண்டாம்.. கொட்டும் மழையில் ஸ்கூட்டரில் அமர்ந்து சென்ற ரஜினி! - எல்லாம் இவருக்காக தான்
ரஜினி நடித்து மிகப்பெரிய ஹிட் ஆகி அவரது கேரியரில் முக்கிய படமாக அமைந்தது முரட்டுக்காளை. ஏவிஎம் நிறுவனம் தயாரித்த இந்த படத்தை பற்றி ஒரு தகவலை தயாரிப்பாளர் எம்.சரவணனின் பேத்தி அருணா குகன் தெரிவித்து இருக்கிறார்.
முரட்டுக்காளை படம் ஷூட்டிங் தொடங்க தாமதம் ஆனதால் சிரஞ்சீவி நடிப்பில் punnami naagu என்ற படத்தை தொடங்கினார்களாம். அதன் ரிலீசுக்கு பிறகு ரஜினியின் கால்ஷீட் பற்றி கேட்டு வரும்படி ஏவிஎம் சரவணன் தனது புரொடக்ஷன் மேனேஜரை அனுப்பி appointment வாங்கி வர சொன்னாராம்.
எளிமை
அவர் சென்று ரஜினியிடம் பேசியதும், "அவர் என்னை சந்திக்க வர வேண்டாம் நான் வருகிறேன் இப்போதே" என கூறினாராம்
நான் சென்று கார் அனுப்புகிறேன் சார், மழை பெய்துகொண்டிருகிறது, நான் ஸ்கூட்டரில் தான் வந்திருக்கிறேன் என அவர் கூறினாராம்.
கார் எல்லாம் வேண்டாம், நானும் ஸ்கூட்டரிலேயே வருகிறேன் என சொல்லி மழையில் ஏவிஎம் சென்று இருக்கிறார். இந்த சம்பவம் ரஜினியின். எளிமையை அளவை காட்டுகிறது என அருணா குகன் கூறி இருக்கிறார்.
#AVMTrivia | The simplicity of #Superstar @rajinikanth
— Aruna Guhan (@arunaguhan_) March 25, 2024
‘Murattu Kaalai' was scheduled to be filmed but due to various reasons the shoot could not commence and instead shoot for the Telugu film 'Punnami Naagu' with @kchirutweets Sir began.
Post the release of Punnami Nagu, my… pic.twitter.com/ODmpWcnyAq

பரிசோதிக்காமல் களமிறக்கிவிடப்பட்ட உக்ரைனின் புதிய ஆயுதம் - அதன் நிலை குறித்து வெளியான தகவல்கள் News Lankasri
