ரஜினிகாந்த் நடிக்க விரும்பிய கதை.. ஆனால் நிறைவேறாமல் போன ஆசை! இந்த படம் தான்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்து ஜெயிலர் என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். நெல்சன் இயக்கும் அந்த படத்தின் முதற்கட்ட பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. விரைவில் ஷூட்டிங்கும் தொடங்க இருக்கிறது.
இந்நிலையில் தற்போது ரஜினிகாந்தை இன்று ஆர்.பார்த்திபன் சந்தித்து பேசி இருக்கிறார். இரவின் நிழல் படம் பார்த்த ரஜினி அவரை வீட்டிற்கே அழைத்து பாராட்டி இருக்கிறார்.
அப்போது ரஜினி அவரிடம் 'நீங்க பொன்னியின் செல்வன் படத்தில் என்ன ரோலில் நடிக்கிறீங்க' என கேட்டாராம். அதற்கு அவர் பதில் கூற, தானும் பொன்னியின் செல்வன் கதையை பல முறை படித்திருக்கிறேன் என ரஜினி கூறினாராம்.
பொன்னியில் செல்வனில் நடிக்க ஆசை
மேலும் அந்த படத்தில் நடிக்க ஆசை இருந்தது என்றும் ரஜினி கூறினாராம். தான் ஷூட்டிங் செல்லும் போது கிடைக்கும் இடைவேளை நேரங்களில் பொன்னியின் செல்வன் படித்தேன் எனவும் பார்த்திபனிடம் அவர் கூறி இருக்கிறார்.
இந்த விஷயத்தை லைவ் வீடியோவில் பார்த்திபன் தெரிவித்திருக்கிறார்.

வைகோ உயிரை 3 முறை காப்பாற்றினேன்; மகனுக்காக எனக்கு துரோகி பட்டம் - மல்லை சத்யா குற்றச்சாட்டு IBC Tamilnadu

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
