ரம்பா ஊர்வசி மேனகா (தெலுங்கு): திரை விமர்சனம்
ரம்பா ஊர்வசி மேனகா
அல்லரி நரேஷ் நடிப்பில் தலைப்பிலேயே எதிர்பார்ப்பைத் தூண்டி வெளியாகியுள்ள ரம்பா ஊர்வசி மேனகா திரைப்படம் பார்வையாளர்களை கவர்ந்ததா என்று பார்ப்போம் வாங்க.

கதைக்களம்
அல்லரி நரேஷ் தனது வீட்டில் உள்ள மேஜிக் புத்தகத்தின் மீது சிறுவயதிலேயே ஆர்வம் கொண்டுள்ளார். அந்த புத்தகத்தை திறக்க ஒரு பேட்டர்ன் இருக்கிறது. சிறுவனாக இருக்கும்போதே அதனை திறக்க ஆரம்பிக்கும் நரேஷ் பெரியவனாகியும் அதனை தொடர்கிறார்.
அதற்கு காரணம் புத்தகத்தை திறந்தால் ரம்பா, ஊர்வசி, மேனகா மூவரும் பூமிக்கு வந்து வேண்டிய வரத்தை தருவார்கள் என்று அவரது அம்மா கூறியதுதான். மேலும் அப்படி நடந்தால் சினிமாவில் ஹீரோவாகிவிடலாம் என்று நினைக்கும் நரேஷ், தனது நாடக கம்பெனி மூலம் பெரிய வருமானம் இல்லாத நிலையில் நிறைய கடன் வாங்கியிருக்கிறார்.
ரம்பா, ஊர்வசி, மேனகாவுக்கு சிலை வைத்து தினமும் வழிபடும் நரேஷ் புத்தகத்தை திறக்க முடியாததால் இந்திரனை அடிக்கடி திட்டுகிறார். இதனால் கோபப்படும் இந்திரன், எனக்கு தெரியாமல் ரம்பா, ஊர்வசி, மேனகா மூவரும் அவனைக் காண செல்லக்கூடாது என்ற மனநிலையில் இருக்கிறார்.
ஆனால் அவருக்கு தெரியாமலேயே பூலோகத்திற்கு செல்லும் ரம்பா, ஊர்வசி, மேனகா மூவரும் நரேஷிற்கு வரம் கொடுக்க நினைக்க இந்திரனால் ஒரு பிரச்சனை ஏற்படுகிறது. அதன் பின்னர் நரேஷிற்கு நினைத்தபடி வரம் கிடைத்ததா? அவர் ஹீரோ ஆனாரா? என்பதே மீதிக்கதை.
படம் பற்றிய அலசல்
நாந்தி திரைப்படத்திற்கு பிறகு பெரிய வெற்றிக்காக போராடி வரும் அல்லரி நரேஷின் நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் இது. தனக்கே உரிய காமெடி ஜனாரில் களமிறங்கியிருக்கும் நரேஷ், படம் முழுக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்திருக்கிறார்.
ஆங்காங்கே சிரிக்க வைக்கும் நரேஷ், ஒரு சில எமோஷனல் காட்சிகளிலும் ஸ்கோர் செய்திருக்கிறார். ஆனால் முழுப்படமாக திருப்தி அளித்ததா என்றால் அது கேள்விக்குறிதான். ஏனென்றால் ரம்பா, ஊர்வசி, மேனகா என தலைப்பு வைத்துவிட்டு அந்த கதாபாத்திரங்களை சரியாக பயன்படுத்தாததுதான். படத்தின் தலைப்பிற்கு ஏற்ப ரம்பா, ஊர்வசி, மேனகா ஆகிய மூவரையும் அழகாக காட்டியிருந்தாலும் அவர்களில் ரம்பாவாக நடித்திருக்கும் ராஷி சிங்கிற்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
ஊர்வசியான விஷ்ணு பிரியா, மேனகாவான பிரிஷா சிங் இருவரும் வெறுமனே பல காட்சிகளில் நிற்கிறார்கள். என்றாலும் மூவரும் ஒரு பாடலில் கலக்கியிருக்கிறார்கள். இந்திரனாக வெண்ணிலா கிஷோர் நல்ல நடிப்பை தந்துள்ளார்.
அதிலும் அவர் தாரக் பொன்னப்பாவிற்கு ஐடியை கொடுத்து புரிய வைக்கும்போது படும்பாடு செம காமெடி. ஸ்ரீனிவாச ரெட்டி மற்றும் மூத்த நடிகர் நரேஷ் இருவரும் நம்மை சிரிக்க வைக்க நிறைய முயற்சிக்கிறார்கள். அவற்றில் ஒரு சில காமெடிகள் மட்டுமே ஒர்க்அவுட் ஆகியுள்ளன. படத்தின் பிரச்சனையே சுவாரஸ்யமில்லாத திரைக்கதைதான்.
அம்மா சென்டிமென்டும் (கிளைமேக்ஸ் தவிர) பெரிதாக ஒர்க் ஆகவில்லை. சுரபி பெயருக்கு ஹீரோயினாக வந்து போகிறார். சைதன் பரத்வாஜின் இசை ஓகே ரகம். இயக்குநர் சந்திர மோகன் சிந்தாதா நிறைய தடுமாறியிருக்கிறார்.
க்ளாப்ஸ்
அல்லரி நரேஷ் ஒரு சில காமெடி காட்சிகள் அஜய்யின் கேமியோ
பல்ப்ஸ்
சுவாரஸ்யம் குறைவான திரைக்கதை சுமாரான ரைட்டிங்
மொத்தத்தில் இந்த ரம்பா, ஊர்வசி, மேனகா பார்வையாளர்கள் கேட்ட நகைச்சுவை என்ற வரத்தினை தரவில்லை.