விஜய்யின் சூப்பர் ஹிட் பட வாய்ப்பை தவறவிட்ட ரம்பா.. அதுவும் 90ஸ் பேவரைட் படம்!
ரம்பா
90-களில் இளைஞர்களின் கனவுக்கன்னியாக இருந்தவர் தான் நடிகை ரம்பா. இவர் 1996 -ம் ஆண்டு வெளியான "உள்ளத்தை அள்ளித்தா" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.
இதையடுத்து கமல்,ரஜினி, பிரஷாந்த், விஜய் எனப் பல முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். ரம்பா 2010 -ம் ஆண்டு தொழிலதிபர் இந்திரகுமார் பத்மநாதன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.
இந்நிலையில் விஜய் நடிப்பில் 1999 -ம் ஆண்டு வெளியான ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் ஹீரோயினாக சிம்ரன் நடித்து ரசிகர்ளை கவர்ந்திருப்பார்.
இப்படத்தில் முதல் முதலாக ஹீரோயினாக நடிக்கவிருந்த ரம்பா தானாம். சில காரணங்களால் ரம்பாவால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனதாக கூறப்படுகிறது.
வாகனத்தில் விழுந்து தற்கொலை செய்ய முயற்சி!.. நடிகர் அப்பாஸ் உருக்கமான பேட்டி