பிக் பாஸுக்கு பிறகும் திருவிழாவில் ஆட சென்றது ஏன்? ரம்யா ஜோ கொடுத்த விளக்கம்
விஜய் டிவியின் பிக் பாஸ் 9ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு இருந்தார் ரம்யா ஜோ. அவர் ஆடலும் பாடலும் நிகழ்ச்சிகளில் டான்ஸ் ஆடி பிரபலம் ஆனவர்.
பிக் பாஸில் 70 நாட்கள் அவர் இருந்த நிலையில் அவருக்கு 3.5 லட்சம் ரூபாய்க்கும் சம்பளமாக தரப்படுவதாகவும் செய்திகள் வந்தது.

மீண்டும் திருவிழாவில் ஆடுவது ஏன்?
பிக் பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் ஆன பிறகு ரம்யா மீண்டும் திருவிழாவில் ஆடலும் பாடலும் நிகழ்ச்சியில் டான்ஸ் ஆட சென்றுவிட்டார். அந்த வீடியோவும் சமீபத்தில் வைரல் ஆனது.
அது பற்றி விளக்கம் கொடுத்து இருக்கும் அவர், "எனக்கு பண தேவை இருக்கு. 100ரூ யார் கொடுப்பா, வாடகை, EMI கட்டணும். செலவுக்கு காசு வேண்டும் என்பதால் தான் ஆடுகிறேன். பிக் பாஸ் முடித்து சம்பளம் கையில் கிடைக்க இன்னும் லேட் ஆகும். அதனால் தான் மீண்டும் ஆட சென்றேன்" என ரம்யா கூறி இருக்கிறார்.