பிக்பாஸ் ஆரியை தொடர்ந்து தனது புதிய திரைப்படத்தின் பூஜையில் ரம்யா பாண்டியன், புகைப்படத்துடன் இதோ..
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று கடந்த 17 தேதி முடிவடைந்தது, அனைவரும் எதிர்பார்த்தது போலவே ஆரி அதிக வாக்குகளை பெற்று பிக்பாஸ் டைட்டிலை வென்றார்.
அவருக்கு அடுத்து பாலாஜி முருகதாஸ் மற்றும் ரியோராஜ் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை பிடித்தனர், ஆரிக்கு பரிசு தொகையாக ரூ.50 லட்சம் வழங்கப்பட்டது.
மேலும் இந்த பிக்பாஸ் சீசன் 4-ல் கலந்து கொண்டு பைனல்ஸ் சென்று நான்காவது இடம் பிடித்தார் நடிகை ரம்யா பாண்டியன்.
இந்நிலையில் தற்போது நடிகர் சூர்யாவின் தயாரிப்பில் நடிகைகள் ரம்யா பாண்டியன் மற்றும் வாணி போஜன் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின் ஆரி தனது புதிய படத்தின் பூஜையில் கலந்து கொண்டார், அவரை தொடர்ந்து தற்போது ரம்யா பாண்டியன் தனது புதிய படத்தை பூஜையுடன் தொடங்கியுள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..
— Ramya Pandian (@iamramyapandian) January 31, 2021