திருமணம் குறித்து பேசிய நடிகை ரஷ்மிகா மந்தனா - மனம் திறந்த இளம் நடிகை
கன்னடத்தில் முதன் முதலில் தனது திரை பயணத்தை துவங்கியவர் நடிகை ரஷ்மிகா மந்தனா.
அதன்பின் தெலுங்கில் வெளியான கீதா கோவிந்தம் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய ரீச்சை மக்கள் மத்தியில் பெற்று தந்தது.
இதனை தொடர்ந்து தெலுங்கு திரையுலகில் பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடிக்க துவங்கினார்.
மேலும் சமீபத்தில் தமிழில் முன்னனி நடிகரான கார்த்தியின் நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படத்தின் மூலம் தமிழிலும் கதாநாயகியாக அறிமுகமாகிவிட்டார்.
இந்நிலையில் முதல் முறையாக திருமணம் குறித்து நடிகை ரஷ்மிகா மந்தனா பேசியுள்ளாராம்.
ஆம் ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் தமிழ்நாட்டு கலாச்சாரம் மிகவும் பிடித்துபோனதால் விரைவில் தமிழ்நாட்டு மருமகளாக வருவேன் என கூறியுள்ளார் என்று தகவல் தெரிவிக்கின்றார்.
அதுமட்டுமில்லாமல் தமிழ்நாடு சாப்பாடு மிகவும் பிடிக்கும் எனவும் தெரிவித்துள்ளார் நடிகை ரஷ்மிகா மந்தனா.