ராஷ்மிகா மந்தனா - விஜய் தேவரகொண்டாவின் பிரம்மாண்ட திருமண ஏற்பாடுகள்.. ஒரே நாளில் 2 திருமணம்..
ஒரே நாளில் 2 திருமணம்
விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா திருமணம் பேசுபொருளாகியுள்ளது. இவர்களுடைய திருமணம் இன்று உதய்பூரில் உள்ள பிரம்மாண்ட மாளிகையில் நடைபெறுகிறது.

இதுகுறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன. ராஷ்மிகா - விஜய் திருமணம் நடக்கும் மாளிகைக்கு ஒரு நாளைக்கு ரூ. 1 லட்சத்திற்கும் மேல் வாடகை என கூறப்படுகிறது.

மேலும் வெளிவந்த தகவலின்படி, விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஒரே நாளில் இரண்டு முறை திருமணம் செய்யவுள்ளனர். காலையில் தெலுங்கு பாரம்பரியப்படியும், மாலையில் கொடவா பாரம்பரியப்படியும் திருமணம் நடக்கிறது.
மாமியார் கொடுத்த பரிசு
விஜய் தேவரகொண்டாவின் தாய் மாதவி, தங்களின் பாரம்பரியப்படி மருமகள் ராஷ்மிகாவுக்கு பரம்பரை வளையல்களை பரிசாக வழங்கியுள்ளாராம்.

திருமணத்திற்கு பின், ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா திருமண ரிசப்ஷன் வருகிற மார்ச் 4ஆம் தேதி அன்று நடைபெறுகிறது. இது ஹைதராபாத்தில் உள்ள தாஜ் கிருஷ்ணா ஹோட்டலில் நடைபெறும். இதில் சினிமா, அரசியல் பிரபலங்கள் பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது.
வடிவேலுக்கு வராத கூட்டமா விஜய்க்கு வந்துவிட்டது: திமுகவின் டி.கே.எஸ் இளங்கோவன் கருத்து IBC Tamilnadu
இறக்குமதி செய்யப்பட்ட ரசாயனம் சேப்பாக்கம் மைதானத்தில் தெளிப்பு! வாழ்வா சாவா போராட்டத்தில் இந்தியா News Lankasri