அவ்வளவு சம்பளம் எல்லாம் தர முடியாது.. அனிமல் வெற்றி பிறகு ரஷ்மிகாவுக்கு வந்த புது சிக்கல்
நடிகை ராஷ்மிகா அனிமல் படம் மூலமாக ஹிந்தியிலும் தற்போது ஒரு முன்னணி நடிகையாக வளர்ந்து இருக்கிறார். சந்தீப் ரெட்டி வங்கா இயக்கிய அந்த படத்தில் ரன்பீர் ஜோடியாக ராஷ்மிகா நடித்து இருந்தார்.
படம் 900 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்து இருந்தாலும், தற்போது ஓடிடி ரிலீசுக்கு பிறகு அதிகம் ட்ரோல்களை படம் சந்தித்து வருகிறது. குறிப்பாக பெண்களை மிக மோசமாக படத்தில் காட்டி இருப்பதாக பலரும் விமர்சித்து வருகின்றனர்.
இது பற்றி விளக்கம் கொடுத்த ராஷ்மிகா, "இயக்குனர் imagination தான் இந்த படம். அவர் சொன்னபடி தான் நடித்தேன். அனிமல் படத்தில் என்னுடைய ரோல் வலிமையானது தான். குடும்பத்தை காப்பாற்ற எதையும் செய்யும் அளவுக்கு செல்பவர் தான்' என தெரிவித்து இருக்கிறார்.
ராஷ்மிகா சம்பளம்
ராஷ்மிகா தற்போது ஹிந்தியில் முன்னணிக்கு வந்திருக்கும் நிலையில் தெலுங்கு படங்களில் நடிக்க 4 கோடி ருபாய் வரை சம்பளம் கேட்கிறாராம். அதற்கு முன் 2 முதல் 2.5 கோடி வரை அவர் பெற்று வந்தார்.
சம்பளம் அதிகமாக கேட்பதால் தெலுங்கு தயாரிப்பாளர்கள் தெறித்து ஓடுகிறார்களாம். அவர் சம்பளத்தை குறைக்காவிட்டால் தெலுங்கில் வாய்ப்புகள் குறைந்துவிடும் என ஒரு தயாரிப்பாளர் வெளிப்படையாகவே பேட்டி கொடுத்திருக்கிறார்.
சம்பளம் அதிகமாக கேட்பதால் தெலுங்கு தயாரிப்பாளர்கள் தெறித்து ஓடுகிறார்களாம். அவர் சம்பளத்தை குறைக்காவிட்டால் தெலுங்கில் வாய்ப்புகள் குறைந்துவிடும் என ஒரு தயாரிப்பாளர் வெளிப்படையாகவே பேட்டி கொடுத்திருக்கிறார்.