ராஷ்மிகா திருமணத்திற்கு யாரெல்லாம் வராங்க தெரியுமா! கெஸ்டுக்கு போடப்பட்ட முக்கிய கண்டிஷன்
நடிகை ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் காதலித்து வரும் நிலையில் பெற்றோர் சம்மதத்துடன் வரும் பிப்ரவரி 26ம் தேதி திருமணம் செய்து கொள்ள இருக்கின்றனர்.
உதய்பூரில் இருக்கும் 400 ஆண்டுகள் பழமையான அரண்மனையில் அவர்கள் திருமணம் நடைபெற இருக்கிறது. திருமண அழைப்பிதழ் போட்டோவும் தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.

கண்டிஷன்
ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா திருமணத்தில் கெஸ்ட் ஆக குடும்பத்தினர் மற்றும் மிக நெருக்கமான நண்பர்கள் மட்டுமே இருக்கிறார்களாம். சினிமா துறை நட்சத்திரங்கள் யாரும் கெஸ்ட்லிஸ்டில் இல்லை என தகவல் வெளியாகி இருக்கிறது.
மேலும் திருமணத்திற்கு வரும் கெஸ்ட் யாரும் போன் கொண்டு வர கூடாது எனவும் கண்டிஷன் போடப்பட்டு இருக்கிறதாம். போட்டோ, வீடியோ லீக் ஆவதை தடுக்க இந்த கண்டிஷன் போடப்பட்டு இருக்கிறதாம்.
மேலும் மார்ச் 4ம் தேதி நடக்க இருக்கும் வரவேற்பு நிகழ்ச்சியில் தான் சினிமா நட்சத்திரங்கள் கலந்துகொள்வார்கள் என தெரிகிறது.

ஆட்சியில் பங்கு தராவிட்டால் கூட்டணியில் இருந்து வெளியேறுவோம் - மாவட்ட காங்கிரஸ் தீர்மானம் IBC Tamilnadu