பேரனின் புகைப்படத்தை வெளியிட்ட 48 வயதாகும் நடிகை ரவீணா.. புகைப்படத்துடன் இதோ
ரவீணா டாண்டன்
பாலிவுட் திரையுலகில் பிரபலமான நடிகையாக இருக்கும் ரவீணா டாண்டன் தமிழில் பரிச்சயமானது கமலின் ஆளவந்தான் படத்தின் மூலம் தான்.
இதன்பின், கடந்த ஆண்டு வெளிவந்த கே.ஜி.எஃப் 2 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை ரவீணா கடந்த 1995ஆம் ஆண்டு பூஜா {11 வயது} மற்றும் சாயா {8 வயது} ஆகியோரை தத்தெடுத்து கொண்டார்.
இதன்பின் 2003ஆம் ஆண்டு பிரபல விநியோகஸ்தர் அனில் தடானி என்பவரை சந்தித்து காதலித்து கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
இந்த காதல் தம்பதிக்கு 2005ஆம் ஆண்டு ஒரு அழகிய பெண் குழந்தையும் {ராஷா} பிறந்தது. இதன்பின் 2008ஆம் ஆண்டு ஒரு மகனும் {ரன்பீர் வர்தன்} பிறந்தார்.

பேரன் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை
இந்நிலையில், திருமணத்திற்கு பின் ரவீணா தத்தெடுத்த சாயாவிற்கு திருமணம் நடந்து தற்போது 4 வயதில் ஒரு மகனும் உள்ளார்.
நடிகை ரவீணா தனது பேரனின் பிறந்தநாள் ஆண்டு வாழ்த்து தெரிவித்து பேரனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
பட்டு வேட்டி சட்டையுடன் தலைமை செயலகத்தில் முதல்வர் விஜய்... திடீர் மாற்றத்திற்கு காரணம் என்ன? IBC Tamilnadu