ஒன்னு இல்லை ரவி மோகனுக்கு அடுத்து நான்கு.. என்ன விஷயம் தெரியுமா?
ரவி மோகன்
தமிழ் சினிமாவில் படங்கள் நடிப்பது, அவரது வாழ்க்கையை கவனிப்பது என இருந்தவர் நடிகர் ரவி மோகன்.
ஆனால் கடந்த சில வருடங்களாக ரவி மோகன் பற்றி ஏதாவது ஒரு செய்தி வந்துகொண்டே இருக்கிறது. அப்படி கடந்த வருடம் அவர் விவாகரத்து செய்தி வெளியாக அடுத்த தனது பெயரை ரவி மோகனாக மாற்றினார்.
தற்போது ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்ற பெயரில் ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். அந்த நிறுவனத்தின் மூலம் ப்ரோகோடு (Brocode) என்ற படத்தை தயாரிக்க இருக்கிறாராம்.
நாயகிகள்
சந்தானத்தை வைத்து டிக்கிலோனா, வடக்குப்பட்டி ராமசாமி படங்களை இயக்கிய கார்த்திக் யோகி இப்படத்தை இயக்குகிறாராம், ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் இப்படத்திற்கு இசையமைக்க இருக்கிறார்.
தற்போது இப்படம் குறித்து வந்த தகவல் என்னவென்றால், இந்த படத்தில் ஒன்று இல்லை, 4 நாயகிகள் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகவுள்ளது.

ஏர் இந்தியா துயர சம்பவம்... ஒரு வாரத்திற்கு முன்பே விமான விபத்தை கணித்த இந்திய ஜோதிடர் News Lankasri
