கையை அறுத்துக்கொண்டேன் என ரவி மோகன் பரபரப்பு பேட்டி... திடீரென ஆர்த்தி செய்த காரியம்
ரவி மோகன்
தமிழ் சினிமாவில் மக்களால் கொண்டாடப்படும் ஒரு டாப் நாயகன். பல வருடங்களாக சினிமாவில் பயணிக்கும் இவர் எந்த ஒரு கிசுகிசுவிலும் சர்ச்சையிலும் சிக்காமல் இருந்தார்.
ரவி மோகன் பற்றி ஏதாவது செய்தி வருகிறது என்றால் படத்தை பற்றியதாக மட்டுமே இருக்கும். ஆனால் கடந்த வருடம் முதல் ரவி மோகன் படத்தை தாண்டி அவரது சொந்த வாழ்க்கை குறித்த பிரச்சனைகள் தான் அதிகம் வலம் வருகின்றன.
ரவிமோகன் அவரது மனைவி ஆர்த்தியை பிரிவதாக கூறியதில் இருந்து சமூக வலைதளங்களில் பரபரப்பாக இருவரும் மாறி மாறி குற்றம் சாட்டி வந்தனர்.

பரபரப்பு
ரவி மோகன்-ஆர்த்தியின் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருக்கும் நிலையில் இன்று பரபரப்பான சம்பவம் நடந்துள்ளது. அதாவது ரவி மோகன் விவாகரத்து அறிவித்த பிறகு பாடகி கெனிஷாவுடன் அதிகம் வெளியே வர ஆரம்பித்தார்.

இதனால் இருவரை பற்றியும் தவறான செய்திகள் வலம் வர ஆரம்பித்தன. இன்று திடீரென ரவி மோகன் பத்திரிக்கையாளர்களை சந்தித்து, திருமணம் ஆனதில் இருந்தே கஷ்டம் தான். பொறுத்துக்கொண்டு வாழ்ந்தேன், இன்னும் என்ன வேண்டும்.
நான் உயிருடன் இருக்கக் கூடாது அதுதான் அவர்களுக்கு வேண்டும். இதோ பாருங்கள், என்னையே நான் துன்புறுத்திக்கொண்டு வருகிறேன் என கையை கிழித்துக்கொண்டதை காட்டினார்.

இந்த பிரஸ் மீட்டில் அவர் பரபரப்பான விஷயங்களை பகிர்வதற்கு முன்னே ஆர்த்தி ஒரு பதிவு போட்டுள்ளார்.
அதில், உண்மையோடு உலகை எதிர்க்கொள்கிறேன், உண்மையே வெல்லும். எனது கண்ணியமான மௌனத்தை பலவீனமாக நினைக்க வேண்டாம் என பதிவு போட்டிருக்கிறார்.