ரவி மோகன் சொத்து ஆவணங்கள்.. நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
நடிகர் ரவி மோகன் விவாகரத்து வழக்கு ஒருபக்கம் நடந்துகொண்டிருக்க தற்போது புது தோழி கெனிஷா உடன் ஜோடியாக இலங்கைக்கு ட்ரிப் சென்று இருக்கிறார். அங்கு அவர்கள் இலங்கையை சேர்ந்த அமைச்சரை சந்தித்த போட்டோவும் சமீபத்தில் வைரல் ஆகி இருந்தது.
மேலும் ரவி மோகன் மீது பாபி டச் கோல்டு யுனிவர்சல் சமீபத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தது. படம் நடிப்பதற்காக வாங்கிய 6 கோடி ரூபாய் அட்வான்ஸை திருப்பி தரவில்லை என ரவி மோகன் மீது அவர்கள் புகார் கூறி இருந்தனர்.
அதன் பிறகு ரவி மோகன் அந்த நிறுவனம் மீது 9 கோடி நஷ்டஈடு கேட்டு எதிர் வழக்கு தொடர்நது இருந்தார்.
ரவி மோகனுக்கு பின்னடைவு
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் ரவி மோகன் பணத்தை திருப்பி கொடுத்துவிடலாமே என நீதிபதி கூறி இருக்கிறார். ஆனால் அடுத்த படம் நடிக்கும்போது பணத்தை திருப்பி தருவதாக கூறினால் பாபி டச் நிறுவனம் ஏற்றுக்கொள்ளவில்லை என ரவி மோகன் வழக்கறிஞர் கூறி இருக்கிறார்.
இந்த பிரச்னையை பேசி தீர்த்துக்கொள்ள மத்தியஸ்தர் நியமித்து நீதிபதி உத்தரவிட்டு இருக்கிறார். மேலும் ரவி மோகன் தொடர்ந்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.
மேலும் ரவி மோகன் 5.9 கோடிக்கான சொத்து ஆவணங்களை 4 வாரங்களில் சமர்பிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது.