ரீ-ரிலீஸாகியுள்ள தெறி படம் இரண்டு நாட்களில் செய்துள்ள வசூல்.. இதோ
தெறி ரீ-ரிலீஸ்
அட்லீ - விஜய் கூட்டணியில் முதல் முறையாக உருவான திரைப்படம் தெறி. கடந்த 2016ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரிக்க ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார்.

இப்படத்தில் சமந்தா, ஏமி ஜாக்சன், நைனிகா, மொட்டை ராஜேந்திரன் என பலரும் நடித்திருந்தனர். மேலும் இயக்குநர் மகேந்திரன்இப்படத்தில் வில்லனாக நடித்து மிரட்டியிருந்தார்.

வசூல்
2016ஆம் ஆண்டு பிளாக்பாஸ்டரான இப்படத்தை 10 ஆண்டுகள் கழித்து தற்போது ரீ-ரிலீஸ் செய்துள்ளனர். கில்லி, சச்சின் படத்தை போலவே இப்படத்திற்கும் மாபெரும் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது நடக்கவில்லை.

இதனால் வசூலும் மிகக்குறைவாகத்தான் வந்துள்ளது. இரண்டு நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள தெறி ரீ-ரிலீஸ் இதுவரை உலகளவில் ரூ. 90 லட்சம் மட்டுமே வசூலித்துள்ளது.