காதலரின் பெயரை பச்சை குத்தி கொண்ட சீரியல் நடிகை ரேஷ்மா, குவியும் ரசிகர்களின் வாழ்த்து..
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை ரேஷ்மா, இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பூவே பூச்சூடவா தொடரின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார்.
அதனை தொடர்ந்து ரேஷ்மா தற்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அபி டைலர் என்ற தொடரில் நடித்து வருகிறார்.
அதே தொடரில் அவருக்கு ஜோடியாக நடித்து வரும் மதனை ரேஷ்மா காதலித்து வருகிறார். மேலும் அவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் அறிவித்து இருந்தனர்.
இந்நிலையில் தற்போது ரேஷ்மா அவரின் காதலர் மதனின் பெயரை தனது கழுத்தின் பின்னால் பச்சை குத்தி கொண்டுள்ளார்.
அதனை ரேஷ்மா அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.