பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து வெளியேறுகிறாரா நடிகை ரேஷ்மா?... காரணம் இதுதானா?
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி, தமிழ் சின்னத்திரையில் மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் தொடர்.
பாக்கியலட்சுமி, ஒரு இல்லத்தரசியின் கதை என்ற அடைமொழியோடு ஒளிபரப்பாகி வந்த இந்த தொடரில் இப்போது பழிவாங்கும் கதைக்களம் ஒளிபரப்பாகி வருகிறது.

பாக்கியாவை பழிவாங்க கெட்டுப்போன சிக்கனை சேர்த்து அவருக்கு கஷ்டத்தை கொடுக்க நினைத்த கோபியின் பிளானை அவர் தெரிந்துகொண்டார்.
உண்மை தெரிந்த வேகத்தில் கோபி வீட்டிற்கு சென்று சரவெடி கேள்வி கேட்ட பாக்கியா அப்படியே போலீஸிலும் புகார் அளித்துள்ளார்.
பிரபல நடிகை
இந்த தொடரில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடம் அதிகம் பிரபலமானவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி.
விஷ்ணு நடித்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானாலும் சரியான பட வாய்ப்பு வரவில்லை, ஆனால் சீரியல்களில் தொடர்ந்து நடிக்கிறார்.

சீதா ராமம், அபி டெய்லர், பாக்கியலட்சுமி என நடித்து வருபவர் இப்போது கார்த்திகை தீபம் புது சீசனில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த நிலையில் திடீரென ரேஷ்மா, ராதிகா கதாபாத்திரத்தை பெருமையாக கூறி அந்த கதாபாத்திர புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
அதைப்பார்த்த ரசிகர்கள் திடீரென அவர் ஏன் ராதிகா போட்டோஸ் போடுகிறார், புதிய சீரியல் வாய்ப்பால் பாக்கியலட்சுமி தொடரில் இருந்து விலகுகிறாரா என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

இதற்காகதான் பாகிஸ்தானியரை எடுத்தோம்: அவரைப் பெற்றதில் மகிழ்ச்சி - சன்ரைசர்ஸின் வெட்டோரி News Lankasri
25 ஆண்டுகளாக பெண்ணை வீட்டு சிறையில் அடைத்து வைத்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம் வழங்கிய தண்டனை News Lankasri
பிரிட்டிஷ் ராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல்: பின்னணியில் ரஷ்யாவின் சதியா? பிரித்தானியா சந்தேகம் News Lankasri