ஆன்ட்டி என சொன்னவருக்கு பளார் விட்ட பாக்கியலட்சுமி நடிகை ரேஷ்மா! பேட்டியில் கொந்தளித்த நடிகை
பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா ரோலில் நடித்து வருபவர் ரேஷ்மா பசுப்புலேட்டி. தற்போது இந்த சீரியலில் ராதிகா கர்ப்பமாக இருப்பது போல கதை நகர்ந்து வருகிறது.
ரேஷ்மா இதற்குமுன் பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்ட போது, தன்னை கொடுமை செய்த கணவரை விவாகரத்து செய்தது, அதன் பின் தனியாளாக மகனை வளர்த்து வருவது பற்றியும் எமோஷ்னலாக பேசினார்.

ஆண்ட்டி என சொன்னவருக்கு பளார்
சமீபத்தில் ரேஷ்மா ஒரு யூட்டியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்து இருக்கிறார். அதில் ஜாலியாக பேசிய அவரை ஒரு தொகுப்பாளர் ஆண்ட்டி என அழைக்க அவர் கோபத்தின் உச்சிக்கே சென்றார். அந்த தொகுபாளரை அவர் பளார் என அறைந்துவிட்டார்.
மேலும் தனது உதடு பற்றி விமர்சிப்பவர்களுக்கு பதிலடி கொடுத்த அவர் ‘இது என் உதடு, அதை பெரிதாக்க சிகிச்சை எடுத்துக்கொள்வது என் இஷ்டம்’ என கூறி இருக்கிறார்.
