மீண்டும் எடுக்கப்படும் பொன்னியின் செல்வன் படத்தின் காட்சிகள் ! அப்படி என்ன ஆனது தெரியுமா?
மீண்டும் எடுக்கப்படும் முக்கிய காட்சிகள்
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்ட வரலாற்று திரைப்படமாக உருவாகியுள்ளது பொன்னியின் செல்வன்.
பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள பொன்னியின் செல்வனின் PS-1 செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இப்படத்தின் போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தின் சில காட்சிகள் மீண்டும் படமாக்கப்பட்டு வருவதாக தகவல் பரவி வருகிறது.
அதன்படி இப்படத்தின் ஒரு சில காட்சிகளில் இயக்குனர் மணிரத்னத்திற்கு திருப்தி இல்லாததால், மீண்டும் அந்த காட்சியை எடுத்து வருகிறார் என கூறப்பட்டது.
இந்நிலையில் தற்போது இது தவறான செய்தி என்பது தெரியவந்துள்ளது, படம் உருவாகியுள்ளதில் இயக்குனர் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், தயாரிப்பாளர்களின் திட்டத்தின் படி போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணி நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மன்னிப்பு கேட்கவில்லை என்றால், 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு - எச்சரிக்கை விடுத்த தனுஷ் !