மீண்டும் இணையும் பேட்ட பட கூட்டணி வெளியான வேற லெவல் தகவல், முழு விவரம் இதோ..
சூப்பர் ஸ்டார் ரஜினி தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக பல வருடங்களாக திகழ்ந்து வருபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து அதிக வசூல் புரிந்து வருகிறது.
மேலும் இவர் இயக்குனர் சிவாவின் இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வந்தார், இப்படத்தில் பணிபுரிந்து வந்த ஒரு சிலருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டதால், இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து இவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டு ஹைதெராபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். பின்னர் மருத்துவர்களின் அறிவுரையின் படி மீண்டும் வீடு திரும்பினார் ரஜினி.
இந்நிலையில் ரஜினி அடுத்ததாக இயக்குனர் கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் தலைவர் 169 படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆம் இதற்கு முன் இவர்கள் கூட்டணியில் வெளியான பேட்ட திரைப்படம் பிளாக் பஸ்டர் ஆகியுள்ள நிலையில் மீண்டும் இந்த கூட்டணி இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.