கர்ப்பமாக இருக்கும் ரோகிணி எடுத்த அதிரடி முடிவு.. அதிர்ச்சியில் மனோஜ், விஜயா.. சிறகடிக்க ஆசை சீரியல்
சிறகடிக்க ஆசை
பரபரப்பான கதைக்களத்தில் நகர்ந்து வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில், விவாகரத்து பத்திரத்தில் ரோகிணி கையெழுத்து போட வீட்டிற்கு வந்திருந்தார். ரூ. 5 லட்சம் பணம் தந்த பிறகும் கூட, அவர் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போட தயங்கினார்.

இந்த சமயத்தில் விஜயா தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு முறை ரோகிணியை திட்டி தீர்க்கிறார். இந்த நிலையில், ஒரு கட்டத்தில் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போட சென்ற ரோகிணி, திடீரென மயங்கி விழுந்துவிட்டார்.

உடனடியாக மருத்துவர் ஒருவரை அழைத்து வந்து ரோகிணிக்கு என்ன ஆனது என பார்க்கிறார்கள். ரோகிணியை பரிசோதித்து பார்க்கும் அந்த மருத்துவர், அவர் கர்ப்பமாக இருப்பதாக கூறுகிறார்.
ரோகிணி எடுத்த அதிரடி முடிவு
ரோகிணி கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை கேட்டு மனோஜ் மற்றும் விஜயா அதிர்ச்சியடைகிறார்கள். அவர்கள் மட்டுமின்றி மொத்த குடும்பமும் ஆடிப்போகிறது. இருந்தும் கூட, விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போடு என ரோகிணியிடம் விஜயா கூறுகிறார்.

ஆனால், என்னால் விவாகரத்து தர முடியாது, மனோஜை விட்டு பிரிய முடியாது என அதிரடியான முடிவை எடுக்கிறார் ரோகிணி. இதை கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போகிறார் மனோஜ். இனி அடுத்து என்ன நடக்கப் போகிறதோ..