ப்ரோமோ பார்த்து ஏமாறாதீங்க.. இது கனவா? சிறகடிக்க ஆசை அடுத்த வார ப்ரோமோவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் எப்போதும் ஒரே ஒரு விஷயத்தை தான் நீண்ட காலமாக கேட்டு வந்தனர். ரோகிணி சிக்குவாரா இல்லையா என்பது தான் அந்த கேள்வி.
நீண்ட காலமாக காத்திருந்த அந்த நேரமும் தற்போது வந்துவிட்டது. ரோகிணி பற்றிய உண்மை மொத்த குடும்பத்திற்கும் தெரியவந்துவிட்டது.
அடுத்த வார ப்ரோமோ
தற்போது அடுத்த வார ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ரோகிணி சித்தப்பாவாக நடித்த நபர் வீட்டுக்கு வந்து ரோகிணி பற்றிய உண்மையை கூறிவிடுகிறார்.
அதை கேட்டு அதிர்ச்சியாகி மாமியார் விஜயா உடனே அவரை அடித்து இழுத்து சென்று கழுத்தை பிடித்து வெளியில் தள்ளி கதவை மூடுகிறார்.
இந்த ப்ரோமோவை பார்த்த நெட்டிசன்கள், 'இந்த சீன் இறுதியில் ரோகிணி கனவில் இருந்து அதிர்ச்சியாக எழுவது போல காட்டப்போகிறார் இயக்குனர்' என கமெண்ட் செய்து வருகின்றனர்.
இது கனவா அல்லது நிஜமா என்பதை அடுத்த வார எபிசோடுகளில் பார்க்கலாம்.


சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பிடித்த ஐஏஎஸ் அதிகாரி.., தற்போது ஆட்சியராக நியமனம் News Lankasri

வீட்டில் பள்ளம் தோண்டும்போது தங்கம் கிடைத்ததாக கூறிய நபர்கள்: தொழிலதிபருக்கு காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

மூளையில் பொருத்தப்பட்ட எலான் மஸ்க் நிறுவன சிப் - நினைப்பதன் மூலம் செயல்களை செய்யும் நபர் News Lankasri
