ரோஜாவிடம் அதை சொல்லாதீங்க.. திருமணதிற்கு முன் பெரிய உண்மையை மறைத்த செல்வமணி
நடிகை ரோஜா 90களில் தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் முன்னணி ஹீரோயினாக இருந்தவர். அவர் இயக்குனர் செல்வமணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அவர்கள் திருமணத்திற்கு முன்பே 24 குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என தான் விரும்பினார்களாம். அது பற்றி செல்வமணி சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார்.
24 குழந்தைகள்
நாங்கள் 24 குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என தான் விரும்பினோம். 12 குழந்தைகள் நாங்களே பெற்றுக்கொள்ளவும், மேலும் 12 குழந்தைகளை உலகம் முழுக்க இருக்கும் வெவ்வேறு இனங்களில் இருந்து தத்தெடுக்க நினைத்தோம்.
ஆனால் ஒரு ஆபரேஷனுக்கு பிறகு டாக்டர் வந்து ரோஜா குழந்தை பெற்றுக்கொள்ள 50-50 வாய்ப்பு இருக்கு, அவரது கருப்பை பாதிக்கப்பட்டு இருக்கிறது, கர்ப்பமாகாமல் போகவும் வாய்ப்பு இருக்கிறது என சொன்னார்.
ஆனால் அதை ரோஜாவிடம் சொல்ல வேண்டாம் என டாக்டரும் கூறிவிட்டேன். வேறு யாருக்கும் அதை சொல்லவில்லை.
அதன் பின் திருமணம் செய்துகொண்ட நிலையில் இரண்டு குழந்தைகள் பிறந்தார்கள் என RK செல்வமணி தெரிவித்து இருக்கிறார்.