பாரதி கண்ணம்மா சீரியலை விட்டு வெளியேறிய நடிகை ரோஷினியின் முதல் பதிவு.. இதோ
விஜய் டிவியின் TRP உச்சத்திற்கு செல்ல முக்கியமான காரணமாக இருந்த சீரியல், பாரதி கண்ணம்மா.
இந்த சீரியலில் கதாநாயகியாக அறிமுகமாகி, தமிழ் மக்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகை ரோஷினி ஹரிப்ரியன்.
ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ரோஷினி, தீடீரென்று பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகப்போவதாக தகவல் வெளியானது.
படங்களில் நடிக்கும் வாய்ப்பை நடிகை ரோஷினி பெற்றதன் காரணமாகவே, பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து அவர் விலகியுள்ளார் என்று கூறப்படுகிறது.
சீரியல் விட்டு வெளியேறியபோது, அனைவருக்கும் நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுருந்தார். ஆனால் அதன்பின் எந்த பதிவையும் இன்ஸ்டாவில் வெளியிடவில்லை.
இந்நிலையில், மூன்று வாரங்களுக்கு பிறகு தற்போது, தன்னுடைய சமீபத்திய புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்..