தனது புதிய படத்தில் இளவரசியாக நடிக்கப்போகும் ருக்மிணி வசந்த்... யாருடன் தெரியுமா?
ருக்மிணி வசந்த்
கன்னட சினிமாவில் உருவான காந்தாரா 2 படத்தின் மூலம் மக்களின் கவனத்தை பெற்றவர் தான் ருக்மிணி வசந்த். அந்த படம் செம ஹிட்டடிக்க அடுத்தடுத்து நிறைய பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது.
தங்கப்பூவாக சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களையும் கவர்ந்தவர் தான் ருக்மணி வசந்த். கேஜிஎஃப் பட புகழ் யஷ் நடிக்கும் டாக்ஸிக் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இப்போது உள்ள இளம் சென்சேஷன் நாயகிகளில் ருக்மிணி வசந்த் டாப் லிஸ்டில் இருக்கிறார்.

புதிய படம்
தற்போது ருக்மிணி வசந்த் கமிட்டாகியுள்ள புதிய படம் குறித்து தகவல் வந்துள்ளது.
தெலுங்கில் சர்வானந்த் நாயகனாக நடிக்கும் புதிய படத்தில் தான் ருக்மிணி வசந்த் நடிக்க உள்ளாராம், அதிலும் இந்த படத்தில் இளவரசி கெட்டப்பில் நடிக்க உள்ளாராம். ஸ்ரீனு வைட்லா இயக்கும் இந்த படம் குறித்த நிறைய ஸ்பெஷல் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
