காந்தாரா படத்தில் நடிக்க நடிகை ருக்மிணி வசந்த் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? இதோ விவரம்
சமீபத்தில் வெளிவந்து மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றிருக்கும் படம் காந்தாரா சாப்டர் 1. கடந்த 2022ஆம் ஆண்டு வெளிவந்த காந்தாரா படத்தின் அடுத்த பாகமாக இப்படம் வெளிவந்துள்ளது.
ருக்மிணி
இப்படத்தில் ரிஷப் ஷெட்டி ஹீரோவாக நடித்து இயக்கியுள்ளார். இவருடன் இணைந்து ருக்மிணி வசந்த் நடித்திருக்கிறார். அழகிய கதாநாயகியாக வந்து செல்வது மட்டுமின்றி, கிளைமாக்ஸில் ருக்மிணி கொடுத்த ட்விஸ்ட் திரையரங்கை அதிரவைத்தது.
மதராஸி படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது காந்தாரா படமும் மாபெரும் வெற்றியை ருக்மிணிக்கு கொடுத்துள்ளது.
சம்பளம்
இந்நிலையில், காந்தாரா சாப்டர் 1 படத்தில் கதாநாயகியாக நடிக்க ருக்மிணி வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் நடிப்பதற்காக அவர் ரூ. 1 கோடி சம்பளம் பெற்றதாக கூறுகின்றன.