எஸ்.எஸ்.ராஜமௌலியின் மகாபாரதம் படம் குறித்து வந்த சூப்பர் அப்டேட்... செம மாஸ்
எஸ்.எஸ்.ராஜமௌலி
பிரம்மாண்டத்தின் உச்சமாக பல படங்கள் இயக்கி இந்திய ரசிகர்களை வியக்க வைத்தவர் எஸ்.எஸ்.ராஜமௌலி.
கடைசியாக இவரது இயக்கத்தில் ஆர்ஆர்ஆர் திரைப்படம் வெளியாகி இருந்தது. தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களான ஜுனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரண் இருவரும் முக்கிய நடிகர்களாக நடித்தார்கள்.
தற்போது ராஜமௌலி, மகேஷ் பாபுவுடன் இணைந்து ஒரு படம் இயக்கி வருகிறார், இதில் ஹாலிவுட் வரை சென்று கலக்கிய நடிகை பிரியங்கா சோப்ரா நாயகியாக நடித்து வருகிறார்.
மகாபாரதம்
இந்த படத்திற்கு பிறகு ராஜமௌலி தனது கனவுப் படமான மகாபாரதம் கதையை இயக்க உள்ளாராம்.
இந்த பிரம்மாண்ட படத்திற்காக குறைந்தது 6 முதல் 8 ஆண்டுகள் பணியாற்றி நமது உண்மையான இந்திய இதிகாசங்களின் மகத்துவத்தை புதிய தலைமுறையினருக்கும், உலகளாவிய பார்வையாளர்களுக்கும் காட்ட வேண்டும் என்ற விருப்பம் அவருக்கு உள்ளதாம்.
தற்போது பிரபல எழுத்தாளர் விஜயேந்திர பிரசாத் மகாபாரதம் கதையை 3 பாகங்களாக உருவாக்கி வருவதாகவும் அதற்கான ஸ்கிரிப்ட் வேலைகள் சிறிது காலமாக நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
அதோடு இந்த படத்தில் பிரபல நடிகர் நானி இருக்கிறார் என உறுதியான தகவல் வந்துள்ளது.