மகன் விஜய் உடன் இணைந்தது பற்றி எஸ்ஏசி உருக்கம்! வலிமை கூடுகிறது..
இயக்குனரும் நடிகருமான எஸ்ஏசி தான் நடிகர் விஜய்யின் ஆரம்பகால கெரியரில் உறுதுணையாக இருந்தவர். விஜய்யை பெரிய ஹீரோ ஆக்க வேண்டும் என பல்வேறு முயற்சிகளை செய்து அதில் வெற்றியும் கண்டார்.
தற்போது விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருந்து வருகிறார். ஆனால் விஜய் அப்பா எஸ்ஏசி உடன் சண்டை போட்டு சில வருடங்களாக பேசாமல் தான் இருந்தனர்.
வலிமை கூடுகிறது..
இந்நிலையில் தற்போது எஸ்ஏசி சர்ஜரி முடிந்து வீட்டில் ஓய்வில் இருக்கும் நிலையில் அவரை விஜய் நேரில் சந்தித்து பேசினார். அதன் போட்டோவும் சில தினங்களுக்கு முன் வைரல் ஆனது. மேலும் இன்று விஜய் மக்கள் இயக்கத்தில் முக்கிய பதவியில் இருக்கும் புஸ்ஸி ஆனந்த் எஸ்ஏசி-யை சந்தித்து பேசி இருக்கிறார்.
இந்த போட்டோவை பகிர்ந்து இருக்கும் எஸ்ஏசி "பிள்ளைகள் ஒன்று சேரும் போது பெற்றோருக்கு மட்டும் அல்ல மொத்த குடும்பத்துக்கே வலிமை கூடுகிறது" என குறிப்பிட்டு இருக்கிறார்.
உறவும், பாசமும் மனித மனத்தின் மாமருந்து. 😊 pic.twitter.com/ZDCLws2gGt
— S A Chandrasekhar (@Dir_SAC) September 14, 2023
பிள்ளைகள் ஒன்று சேரும் போது
— S A Chandrasekhar (@Dir_SAC) September 15, 2023
பெற்றோருக்கு மட்டும் அல்ல
மொத்த குடும்பத்துக்கே
வலிமை கூடுகிறது.🙂🙂 pic.twitter.com/OvXS9AZR2J