விவாகரத்து முடிவு எடுத்த தனுஷ்-ஐஸ்வர்யா- கருத்து தெரிவித்த விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர்
தமிழ் சினிமாவில் அதிக விவாத செய்தியாக உள்ளது நடிகர் தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து விஷயம்.
அவர்கள் தகவல் அறிவித்ததில் இருந்து எல்லோருமே வருத்தத்தை தெரிவித்து வருகிறார்கள், இப்படி செய்ய வேண்டாம் கொஞ்சம் யோசித்து பாருங்கள்.
உங்களது குழந்தைகளுக்காக கொஞ்சம் முடிவை மாற்றிக் கொள்ளுங்கள் என அவரவர் கருத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து குறித்து கருத்து தெரிவித்துள்ளார் இயக்குனரும், விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர்.
அவர் வெளியிட்ட வீடியோவில், பிரச்சனைகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை, பிரச்சனைகள் இல்லையெனில் அது வாழ்க்கையே இல்லை.
எனவே மனிதர்களுக்கு ஆயிரம் பிரச்சனைகள் இருக்கும், அதை நாம் பேசி சரிசெய்துகொள்ளலாம். நான் மற்றவர்களுக்கு அறிவுரை கூறுவதாக நினைக்கவேண்டாம். இருந்தாலும் நாம் வாழ்க்கையை எங்கு தொலைத்தோமோ அங்குதான் தேடவேண்டும்.
பணமோ, நிம்மதியா, சந்தோஷமோ அதை நாம் எங்கு தொலைத்தோமோ அங்குதான் தேட வேண்டும். இதை நான் ஒரு நலன்விரும்பியாக மற்றும் ஒரு ரசிகனாக சொல்கிறேன்", என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
